Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு?

ஏப்ரல் 21, 2020 06:11

சென்னை: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், இன்று(ஏப்.,21) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் சில தினங்களாக, வெப்பச் சலன மழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியது.

இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்